ADDED : மார் 28, 2026 04:21 AM
நகர திட்டமிடல் உள்கட்டமைப்பு திட்டங்களை சீராக செயல்படுத்த, தேவையான நிலம் கையகப்படுத்தப்படும். சி.வி.ராமன் நகர் தொகுதி கதிரியனபாளையாவில் கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்க 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
கட்டட திட்ட மீறல் அபராதம், நில வாடகை, ஒற்றை தள தளவமைப்பு திட்ட ஒப்புதல் கட்டணங்களை சேர்த்து, 2026 - 2027 ல் 209.75 கோடி வருவாய் எதிர்பார்க்கிறோம்.
நகரின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், கெம்பேகவுடாவின் தொலைநோக்கு பார்வையை பின்பற்றி, புதிய திட்டம் உருவாக்கப்படும்.
சாம்ராஜ்பேட்டின் பாதராயனபுரா பிரதான சாலை 9 மீட்டரில் இருந்து 24 மீட்டராக அகலப்படுத்தப்படும்.
அரசு உத்தரவுப்படி 1,200 சதுர அடி கட்டடங்களின் உரிமையாளர்கள், குடியிருப்பு சான்றிதழ் பெறுவதற்கான கட்டாய தேவையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
உயர்வான கட்டடங்கள் முன்பாக செல்லும் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க, தரைத்தள வாகன நிறுத்த விதியில் மாற்றம் செய்து உள்ளோம். இது போக்குவரத்து சீராக செல்ல வழிவகுக்கும்.
4,000 சதுர அடியில் வீடு, கட்டடம் கட்ட தனியார் கட்டட கலைஞர்கள், இன்ஜினியர்களிடம் இருந்து தற்காலிக அனுமதி வாங்கலாம்.
