/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐந்து மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் 23.68 லட்சம் வழக்கில் ரூ.52.62 கோடி அபராதம்
/
ஐந்து மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் 23.68 லட்சம் வழக்கில் ரூ.52.62 கோடி அபராதம்
ஐந்து மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் 23.68 லட்சம் வழக்கில் ரூ.52.62 கோடி அபராதம்
ஐந்து மாதங்களில் போக்குவரத்து விதிமீறல் 23.68 லட்சம் வழக்கில் ரூ.52.62 கோடி அபராதம்
ADDED : ஜூன் 20, 2025 11:16 PM
பெங்களூரு:போலீசார் கண்காணித்தும் பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறுவோரையும், விதிமீறல்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஐந்து மாதங்களில் 23.68 லட்சம் வழக்குகள் பதிவாகின. 52.62 கோடி ரூபாய் அபராதம் வசூலாகி உள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பெங்களூரில் வாகனங்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதன் விளைவாக, போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் எண்ணிக்கை, அபராத தொகை அதிகரிக்கிறது. நகரில் போக்குவரத்து நெருக்கடியை சமாளிப்பது, போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.
தொகை உயர்வு
கடந்த 2024 ஜனவரி முதல் மே வரை 39.10 லட்சம் வழக்குகள் பதிவாகின. 2025 ஜனவரி முதல் மே வரை போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் எண்ணிக்கை குறைந்தது என்றாலும், அபராத தொகை அதிகரித்துள்ளது.
அபராத தொகை உயர்த்தப்பட்டதே, இதற்கு காரணம். ஹெல்மெட் அணியாதது, சிக்னல் ஜம்ப், நோ பார்க்கிங் பகுதிகளில், வாகனங்கள் நிறுத்தியது, அலட்சியமாக வாகனம் ஓட்டியது, குறுக்கும், நெடுக்குமாக வாகனம் ஓட்டியது, ஓட்டுநர்கள் சீருடை அணியாதது, இன்சூரன்ஸ் தொகை செலுத்தாதது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது, நடைபாதையில் வாகனம் நிறுத்தியது என பல்வேறு விதங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுகின்றனர்.
விழிப்புணர்வு
போக்குவரத்து விதிகளை மீறுவதால், பெங்களூரில் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பள்ளி, கல்லுாரிகள், லே - அவுட்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணிக்க, பெங்களூரின் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை எடுக்கும் போட்டோக்களின் அடிப்படையில், போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கிறோம். அவர்களின் மொபைல் போனுக்கு தகவல் அனுப்பி, அபராதம் செலுத்தும்படி உத்தரவிடுகிறோம்.
ஒருவேளை அபராதம் செலுத்தாவிட்டால், அவர்களின் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்று போலீசார் அபராதம் வசூலிக்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.