/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்மஸ்தலா வழக்கு பின்னணியில் சசிகாந்த் செந்தில்; தமிழக காங்., - எம்.பி., மீது பரபரப்பு குற்றச்சாட்டு; பா.ஜ., 'மாஜி' அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி அதிரடி
/
தர்மஸ்தலா வழக்கு பின்னணியில் சசிகாந்த் செந்தில்; தமிழக காங்., - எம்.பி., மீது பரபரப்பு குற்றச்சாட்டு; பா.ஜ., 'மாஜி' அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி அதிரடி
தர்மஸ்தலா வழக்கு பின்னணியில் சசிகாந்த் செந்தில்; தமிழக காங்., - எம்.பி., மீது பரபரப்பு குற்றச்சாட்டு; பா.ஜ., 'மாஜி' அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி அதிரடி
தர்மஸ்தலா வழக்கு பின்னணியில் சசிகாந்த் செந்தில்; தமிழக காங்., - எம்.பி., மீது பரபரப்பு குற்றச்சாட்டு; பா.ஜ., 'மாஜி' அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி அதிரடி
ADDED : ஆக 20, 2025 07:52 AM

தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, பெண்கள் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி, எஸ்.ஐ.டி., விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கின் புகார்தாரர் அடையாளம் காட்டிய 20 இடங்களில் பள்ளம் தோண்டப்பட்டது. ஒரு இடத்தில் மட்டும் எலும்புகூடுகள், மண்டை ஓடு சிக்கியது.
புகார்தாரர் சொல்வதெல்லாம் பொய் என்று, பா.ஜ., தலைவர்கள் கூறினர். தர்மஸ்தலாவில் பெண்கள் உடல்களை, சட்டவிரோதமாக புதைத்ததாக கூறும்படி ஒரு கும்பல் என்னை தொடர்பு கொண்டது. அந்த கும்பல் கூறியபடி நடந்து கொண்டதாக, எஸ்.ஐ.டி., அதிகாரிகள் முன்பு புகார்தாரர் கூறியதாகவும் தகவல் வெளியானது.
சித்துக்கு அழுத்தம் இந்நிலையில் பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
பொதுவாக, புதைக்கப்பட்ட உடல்களை தோண்ட வேண்டும் என்றால், நீதிமன்றத்தின் அனுமதி பெறுவது அவசியம். தாசில்தார் முன்பு தான் உடல்களை தோண்டி எடுக்க வேண்டும். ஆ னால், தர்மஸ்தலா வழக்கில் புகார்தாரர் கொண்டு வந்த எலும்பு கூடு, மண்டை ஓடுகளை எங்கிருந்து எடுத்து வந்தார்.
தர்மஸ்தலா வழக்கை எஸ்.ஐ.டி.,யிடம் கொடுக்க, முதல்வர் சித்தராமையாவுக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆனால், அவருக்கு நிறைய இடங்களில் இருந்து அழுத்தம் வந்தது. எனக்கு தெரிந்து காங்கிரஸ் மேலிடம் தான், அவருக்கு அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும்.
காங்., வலதுகரம் நான் அரசியலில் இருப்பதால், தமிழகம், கர்நாடகா, டில்லியில் எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அவர்கள் மூலமாக நான் சில தகவல்களை தெரிந்து கொண்டேன்.
தர்மஸ்தலா வழக்கில் காங்கிரஸ் அரசு எஸ்.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு, தமிழக காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில் தான் காரணம். காங்கிரஸ் மேலிடத்தின் வலதுகரமாக உள்ள அவர் தான், எஸ்.ஐ.டி., அமைக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிடும்படி, காங்கிரஸ் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து உள்ளார்.
தர்மஸ்தலா வழக்கில், 'மாஸ்க்' அணிந்து இருக்கும் புகார்தாரருக்கும், சசிகாந்த் செந்திலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புகார்தாரர் கடந்த, 11 ஆண்டுகளாக தமிழகத்தில் வசித்து உள்ளார். தர்மஸ்தலா வழக்கில் சசிகாந்த் செந்திலின் சதி உள்ளது. பல்லாரியை சேர்ந்த யு - டியூபர் ஒருவர், தர்மஸ்தலா வழக்கு குறித்து பேசிய வீடியோவுக்கு அதிக லைக் வந்து உள்ளது. அவருக்கு ஆதரவாக மேலும் இரு யு - டியூபர்கள் உள்ளனர். மூன்று யு- டியூபர்பர்களும், புகார்தாருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
சி.பி.ஐ., விசாரணை மஞ்சுநாதா கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கோவிலை பற்றி அவதுாறு பரப்புவதன் மூலம், கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு டீம் சதி செய்கிறது. பள்ளம் தோண்டிய இடங்களில் எதுவும் கிடைக்காதததால், என்ன செய்வது என தெரியாமல் அரசு முழிக்கிறது. சட்டசபையில் தர்மஸ்தலா வழக்கு குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் விளக்கம் அளிக்கும் போது உண்மையை பேசவில்லை என்ற குற்ற உணர்வு பரமேஸ்வர் முகத்தில் இருந்ததை நான் பார்த்தேன்.
இந்த வழக்கில் சதி இருப்பதாக, துணை முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார். சதி செய்தவர்களை அரசு உடனடியாக கைது செய்து, நமது மாநிலத்தின், மஞ்சுநாதா கோவில் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும். சசிகாந்த் செந்தில் மீது நான் கூறிய குற்றச்சாட்டை நிரூபிக்க தயாராக உள்ளேன். இந்த வழக்கை சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரித்தால் தான் உண்மை வெளிவரும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்து, சட்ட போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

