sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கோலாரில் எஸ்.சி., கணக்கெடுப்பு மே- 5 முதல் 17 வரை நடத்த முடிவு

/

கோலாரில் எஸ்.சி., கணக்கெடுப்பு மே- 5 முதல் 17 வரை நடத்த முடிவு

கோலாரில் எஸ்.சி., கணக்கெடுப்பு மே- 5 முதல் 17 வரை நடத்த முடிவு

கோலாரில் எஸ்.சி., கணக்கெடுப்பு மே- 5 முதல் 17 வரை நடத்த முடிவு


ADDED : ஏப் 28, 2025 06:55 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்; ''கோலார் மாவட்டத்தில் எஸ்.சி., மற்றும் அதன் உட்பிரிவு குறித்து மே- 5 முதல் 17 வரை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது,'' என்று கோலார் கலெக்டர் எம்.ஆர்.ரவி தெரிவித்தார்.

எஸ்.சி., மற்றும் அதன் உட்பிரிவு கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக, நேற்று முன்தினம், கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் எம்.ஆர்.ரவி பேசியதாவது:

நீதிபதி எச்.என்.நாகமோகன்தாஸ் தலைமையிலான கமிஷன் அறிக்கை படி, மாநிலம் முழுதும் எஸ்.சி., மற்றும் அதன் உட்பிரிவுகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

கோலார் மாவட்டத்தில் மே- 5 முதல் மே 17 வரை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்படும்.

வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியில் ஈடுபட்ட துவக்கப்பள்ளி ஆசிரியர்களே, இப்பணியிலும் ஈடுபடுவர்.

இதற்கான பணியில் 1,691 ஆசிரியர்கள் ஈடுபடுவர். 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இப்பணியில் ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.

இதற்கான மேற்பார்வை அதிகாரிகளாக 153 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாலுகா அளவில் கணக்கெடுப்பு குறித்து, இன்று தனிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஒவ்வொரு கிராமத்திலும் வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us