ADDED : மே 17, 2026 11:24 PM
அ நிறம் | அளவு
ஜே.ஜே.நகர்: பெங்களூரு ஜே.ஜே.நகர் பாதராயனபுராவில் வசிப்பவர் பர்கத் பாஷா, 30. இவரது மனைவி மிஸ்பா, 27. தம்பதி இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மிஸ்பா, தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவியை அழைத்து வர கணவர் சென்ற போது, இரு குடும்பத்திற்கும் பிரச்னை ஏற்பட்டது. மிஸ்பா குடும்பத்தினர் அளித்த புகாரில், பர்கத் பாஷா விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
அவரை, எஸ்.ஐ., பத்மநாபா ஆபாசமாக பேசி தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. போலீஸ் நிலையம் முன், பர்கத் பாஷா உறவினர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
