sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 10 முட்டையை தின்ற பாம்பு

10 முட்டையை தின்ற பாம்பு

10 முட்டையை தின்ற பாம்பு


ADDED : ஏப் 03, 2025 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 07:14 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு : ஹோட்டலுக்குள் நுழைந்த பாம்பு, 10 கோழி முட்டைகளை விழுங்கியது. பாம்பு புகுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை உருவானது.

சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரே தாலுகாவின், கொட்டிகேஹாரா கிராமத்தில், உடுப்பி வைபவ் ஹோட்டல் உள்ளது.

நேற்று முன்தினம் மாலை, ராஜநாகம் ஒன்று ஹோட்டலுக்குள் புகுந்தது. இதை யாரும் கவனிக்கவில்லை. சமையல் அறைக்குள் புகுந்த பாம்பு, அங்கிருந்த 10 கோழி முட்டைகளை விழுங்கியது.

ஒரே நேரத்தில் இத்தனை முட்டைகள் வயிற்றுக்குள் சென்றதால், அதன் வயிறு புடைத்துக் கொண்டது. அங்கிருந்து நகர முடியாமல் பாம்பு தவித்தது.

அறைக்குள் வந்த ஹோட்டல் ஊழியர்கள், பாம்பை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாம்பு பிடி நிபுணர் ஆரிப் என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு வந்த ஆரிப், பாம்பின் வாலை பிடித்து மேலே துாக்கியதும், 10 முட்டைகளையும் பாம்பு கக்கியது. இந்த பாம்புக்கு ஹோட்டல் உரிமையாளர் பக்தியுடன் பூஜை செய்தார்.

அதன்பின் பாம்பை ஆரிப், சார்மாடிகாட் வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us