sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மலபிரபா ஆற்றில் மூழ்கி ராணுவ வீரர், சிறுவன் பலி

மலபிரபா ஆற்றில் மூழ்கி ராணுவ வீரர், சிறுவன் பலி

மலபிரபா ஆற்றில் மூழ்கி ராணுவ வீரர், சிறுவன் பலி


ADDED : ஏப் 14, 2025 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2025 05:55 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகல்கோட் : மலபிரபா ஆற்றில் தத்தளித்த சிறுவனை காப்பாற்ற முயற்சித்த ராணுவ வீரரும், சிறுவனும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பாகல்கோட் மாவட்டம், ஹன்சனுார் கிராமத்தை சேர்ந்தவர் ஷேக்கப்பா, 15. மன்னேரி கிராமத்தில் உள்ள மலபிரபா ஆற்றில் நேற்று முன்தினம் மதியம் குளிக்க சென்றார்.

இவரை போன்றே, கதக் மாவட்டத்தின் பெனகல் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மஹந்தேஷ், 25, குளிக்க வந்தார்.

ஆற்றில் ஆழமான பகுதிக்கு சென்ற ஷேக்கப்பா, தத்தளிப்பதை பார்த்த மஹந்தேஷ், உடனடியாக ஆற்றில் குதித்து மாணவரை காப்பாற்ற முயற்சித்தார். ஆனால், அவராலும் முடியாமல், இருவரும் நீரில் மூழ்கினர்.

இதை பார்த்த அங்கிருந்தோர், உடனடியாக தீயணைப்பு படையினருக்கும், பாதாமி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின், இருவரின் உடலையும் அன்றிரவு மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us