ADDED : மே 09, 2026 02:21 AM
பெங்களூரு: கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சகர்ஷா - யஷ்வந்த்பூர் இடையில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தென் மேற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
கோடை கால விடுமுறையை ஒட்டி, பயணியர் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், கிழக்கு மத்திய ரயில்வே சார்பில் பீஹார் மாநிலம் சகர்ஷாவில் இருந்து, பெங்களூரு யஷ்வந்த்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
வரும் 14ம் தேதியில் இருந்து, ஜூலை 9ம் தேதி வரை, வாரந்தோறும் வியாழக்கிழமை சகர்ஷாவில் இருந்து இரவு 8:30 மணிக்கு புறப்படும் ரயில், சனிக்கிழமை இரவு 10:30 மணிக்கு யஷ்வந்த்பூர் வரும்.
மறுமார்க்கமாக வரும் 17ம் தேதியில் இருந்து ஜூலை 12ம் தேதி வரை யஷ்வந்த்பூரில் இருந்து, சகர்ஷாவுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் புறப்படும்.
காலை 7:00 மணிக்கு புறப்படும் ரயில் செவ்வாய்க்கிழமை காலை 11:00 மணிக்கு சகர்ஷா செல்லும்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
