ADDED : மார் 26, 2026 12:45 AM

அ நிறம் | அளவு
தங்கவயல்: ஆண்டர்சன்பேட்டை பி.எம்., சாலையில் உள்ள ஸ்ரீராமசந்திர மூர்த்தி திருக்கோவிலில், நேற்று ஸ்ரீ ராமர் -- சீதாதேவி கல்யாண உத்சவம் நடந்தது.
ஸ்ரீ ராமசந்திர மூர்த்தி திருக்கோவிலின் 52ம் ஆண்டு விழாவும், ராமநவமி விழாவும் நடந்து வருகிறது. நேற்று காலை 5:00 மணி முதல் மலர் அலங்காரம், ஆகம விதிப்படி அர்ச்சனை, மகா மங்களாரத்தி, பிரசாத வினியோகம் நடந்தது.
காலை 11:00 மணி முதல் மந்திரங்கள் ஓத, மங்கள இசை ஒலிக்க ஸ்ரீராமர் - சீதாதேவி கல்யாண உத்சவம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் எழுப்பி, தரிசனம் செய்தனர். பகல் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு மெல்லிசை கச்சேரி நடந்தது.
