sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை ஆண்டு விழா தொம்மலுாரில் துவக்கம்

/

ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை ஆண்டு விழா தொம்மலுாரில் துவக்கம்

ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை ஆண்டு விழா தொம்மலுாரில் துவக்கம்

ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை ஆண்டு விழா தொம்மலுாரில் துவக்கம்


ADDED : ஜூலை 08, 2025 05:51 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 05:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொம்மலுார் : ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம் நேற்று துவங்கியது.

பெங்களூரு தொம்மலுார் கிருஷ்ணா ரெட்டி லே - அவுட்டில் உள்ள ஸ்ரீ சூர்ய நாராயண சுவாமி கோவில் கல்யாண மண்டபத்தில் நேற்று ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை 44ம் ஆண்டு விழா, வேத அறிஞர்கள் கவுரவிப்பு மஹோத்சவம், ஸ்ரீசாதுராம் சுவாமிகளின் 25ம் ஆண்டு ஆராதனை இரண்டாம் பாகம் விழா நடந்தது.

விழா மேடையில், ஸ்ரீவித்யாவின் ஒரு தோற்றமான ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் படங்கள்; நவ கன்னிகைகள் சிலைகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

விழாவின் முதல் நாளான நேற்று காலையில், வேதம் பயிலும் 25 மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, 11 அறிஞர்கள் வேதம் ஓதினர். பக்தவச்சலம் பாகவதர், பாகவத மூல பாராயணம் நடத்தினார். பின், 200 வேத அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து, விபூதிபுரத்தில் உள்ள வீர சிம்மாசன மடத்தில் உள்ள மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் 300 மகளிர், லலிதா சஹஸ்ரநாம பாராயணம் செய்தனர். தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பகவத் பிரசாதம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்காக சென்னை, திருவண்ணாமலை, கும்பகோணம்; கேரளாவின் திருவனந்தபுரம், கர்நாடகாவின் மைசூரு, ஷிவமொக்கா, உடுப்பி, மங்களூரில் இருந்து பலர் வந்திருந்தனர்.

ஸ்ரீவித்யா தொண்டு அறக்கட்டளை 44ம் ஆண்டு விழாவில், 200 வேத அறிஞர்கள் கவுரவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us