sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு ஏ.ஐ., மூலம் கண்காணிப்பு

/

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு ஏ.ஐ., மூலம் கண்காணிப்பு

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு ஏ.ஐ., மூலம் கண்காணிப்பு

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு ஏ.ஐ., மூலம் கண்காணிப்பு


ADDED : பிப் 04, 2025 06:51 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் முறைகேடுகளை கண்டறிய முதன் முறையாக, ஏ.ஐ., எனும் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்த, கர்நாடக தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக, கர்நாடக தேர்வு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

நடப்பாண்டு மார்ச் 21ல், மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்குகிறது. இதற்காக கர்நாடக தேர்வு ஆணையம் தயாராகிறது. மாநிலத்தின் அனைத்து மையங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன.

இந்த காட்சிகளின் அடிப்படையில் தவறுகளை கண்டறிய இம்முறை ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த, தேர்வு ஆணையம் முடிவு செய்துள்ளது. மாநில அளவிலான அதிரடிப்படையினர், தேர்வு நடக்கும் நாட்களில், ஆன்லைன் வழியாக உன்னிப்பாக கண்காணிப்பர். இம்முறை தாலுகா அளவிலும், அதிரடிப் படை அமைக்கப்படும்.

அனைத்து மாவட்டங்களிலும், கடந்த டிசம்பர் இறுதியில் பாடங்கள் முடிக்கப்பட்டன. படிப்பில் பின் தங்கியவர்கள் உட்பட, அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது, தேர்வு ஆணையத்தின் விருப்பம்.

இதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு பாடத்திலும், தலா ஐந்து மாதிரி வினாத்தாள்களை தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது. இவற்றை வைத்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us