ADDED : ஏப் 30, 2026 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: பெங்களூரில் நேற்று பெய்த கனமழையால் பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. யாரப் நகரில் சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை சையத் சுபியான், 18 என்பவர் தெரியாமல் மிதித்து விட்டார்.
அவரை மின்சாரம் தாக்கி துாக்கி வீசியது. படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். மாணவரான சையத் சுபியான் பி.யு.சி., தேர்வில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

