sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 புதையலுக்கு ஆசைப்பட்டு கோவில் கோபுரம் சேதம்

/

 புதையலுக்கு ஆசைப்பட்டு கோவில் கோபுரம் சேதம்

 புதையலுக்கு ஆசைப்பட்டு கோவில் கோபுரம் சேதம்

 புதையலுக்கு ஆசைப்பட்டு கோவில் கோபுரம் சேதம்


ADDED : ஜன 09, 2026 06:33 AM

Google News

ADDED : ஜன 09, 2026 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முல்பாகல்: முல்பாகலின் ஹொசராய சுவாமி கோவிலில் புதையல் இருப்பதாக கருதி, கோவில் கோபுரத்தை மர்ம கும்பல் சேதப்படுத்தி உள்ளது.

குருபர் சமூகத்தினருக்கான கோவில், முல்பாகல் ஹொசராய சுவாமி கோவில் உள்ளது. பல நுாறு ஆண்டுகள் பழமையான கோவிலாகும்.

இக்கோவிலில் ஒன்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேவர பூஜை, விஜயதசமி பூஜைகளின் போது மட்டுமே திறக்கப்படும். மற்ற நாட்களில் திறக்கப்படுவதில்லை.

பழமை வாய்ந்த இக்கோவிலில் தங்கம் வைரம், வெள்ளி உட்பட பெரும் புதையல் இருப்பதாக நினைத்து மர்ம கும்பல், ஆயுதங்களால் கோவிலின் அஸ்திவாரத்தில் 10 அடி ஆழத்திற்கு சுரங்கம் தோண்டி உள்ளனர். கோவிலின் சுவர்கள் சேதம் அடைந்து உள்ளது.

கோவிலின் மேற்கோபுரத்தின் வழியாக உள்ளே நுழைவதற்கு பெரிய துளையும் போட்டுள்ளனர். இது பற்றி முல்பாகல் போலீஸ் நிலையத்தில் கோவில் பக்தர்கள் புகார் அளித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us