sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 சொல்ல மறந்த கதை

/

 சொல்ல மறந்த கதை

 சொல்ல மறந்த கதை

 சொல்ல மறந்த கதை


ADDED : டிச 09, 2025 06:36 AM

Google News

ADDED : டிச 09, 2025 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிந்தனை களத்தில் 'சொல்ல மறந்த கதை'எனும் தலைப்பில் தாய்மொழி கூட்டமைப்பு நிறுவனரும், திருவள்ளுவர் சங்க தலைவருமான எஸ்.டி.குமார் பேசியதாவது:

தங்கவயலில் நடந்த கொடுமைகள் ஏராளம். தேவாலயங்களில் தமிழில் இறைவழிபாடு நடத்தக்கூடாது என தடுக்கப்பட்டது. இதற்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்பட்டன. தேசிய கட்சிகளில் சேர்ந்த தமிழர்களில் எத்தனை பேர் எம்.எல்.ஏ.,க்களாக இருக்கின்றனர். 1991ம் ஆண்டு காவிரி கலவரத்தில் தமிழச்சிகளின் தாலி அறுக்கப்பட்டது. பத்திரிகையாளர்களும் தாக்கப்பட்டனர். உள்நாட்டிலே தமிழர்கள் அகதிகளாகினர்.

அரசியலில் வீர வசனம் பேசும் தமிழக அரசியல் வாதிகள், யாரும் எங்களை காப்பாற்ற முன்வரவில்லை. இந்த நிலையை தவிர்ப்பதற்காகவே, பெங்களூரிலே கன்னட தமிழர் ஒற்றுமை மாநாடு கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். அப்போது தான் நம் எதிர்காலம் சிறக்கும். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் உலகளாவிய திருக்குறள் மாநாடு புனித ஜோசப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தப்படும்.

கர்நாடகத்தில் நடந்த மொழி போராட்டங்கள் குறித்து புத்தமாகவே எழுதினேன். 1986ல் கர்நாடகாவில் கன்னடம் மொழி பேசுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதால், 80 லட்சம் தமிழர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us