sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 மூன்றாவது குழந்தையும் பெண்; மனைவியை விட்டு கணவர் ஓட்டம்

/

 மூன்றாவது குழந்தையும் பெண்; மனைவியை விட்டு கணவர் ஓட்டம்

 மூன்றாவது குழந்தையும் பெண்; மனைவியை விட்டு கணவர் ஓட்டம்

 மூன்றாவது குழந்தையும் பெண்; மனைவியை விட்டு கணவர் ஓட்டம்


ADDED : ஜன 05, 2026 05:43 AM

Google News

ADDED : ஜன 05, 2026 05:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: மூன்றாவது குழந்தையும் பெண்ணாக பிறந்ததால் மனைவியையும், குழந்தைகளையும் விட்டு விட்டு வேறு பெண்ணுடன் கணவர் ஓடிவிட்டார்.

ராஜஸ்தானை சேர்ந்தவர் ஹரிஷ், 34. இவரது மனைவி, ஆந்திராவை சேர்ந்த வரலட்சுமி, 30. இவர்களுக்கு 2014ல் திருமணம் நடந்தது. அடுத்தடுத்து, இரண்டும் பெண் குழந்தைகளாக பிறந்தன. மூன்றாவதாக மனைவி கர்ப்பமடைந்த போது, ஆண் குழந்தை பிறக்கும் என, எதிர்பார்த்தார். ஒன்றரை மாதத்துக்கு முன், பெண் குழந்தை பிறந்ததால், ஹரிஷின் கோபம் அதிகரித்தது.

ஓராண்டாகவே மனைவியை ஒதுக்கி வைத்தார். வீட்டுக்கு வருவது இல்லை. வேறொரு பெண்ணுடன் ஹரிஷ் ஓடிவிட்டார்.

தென் கிழக்கு மண்டல மகளிர் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்துள்ள வரலட்சுமி கூறியதாவது:

மூன்றும் பெண் குழந்தையாக பிறந்ததால், என் கணவர் எங்களை உதறிவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் 10 லட்சம் ரூபாய் கடன் வைத்துள்ளார். குழந்தைகளை எப்படி வளர்ப்பது. போலீசில் புகார் அளித்து, ஒரு மாதமாகியும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

என் கணவர் குடும்பத்தினரிடம் பணம் வாங்கி கொண்டு அவர்கள் மவுனமாக உள்ளனர் . என் கணவர் பணியாற்றிய பார்மசியினரே, அவரை துாண்டி விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us