/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் புஷ்ப பல்லக்கு பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
/
தங்கவயலில் புஷ்ப பல்லக்கு பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
தங்கவயலில் புஷ்ப பல்லக்கு பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
தங்கவயலில் புஷ்ப பல்லக்கு பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம்
ADDED : மார் 09, 2026 06:11 AM

தங்கவயல்: ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு பிரம்மோத்சவத்தின் புஷ்ப பல்லக்கு திருவிழாவில் பல்லாயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ராபர்ட்சன் பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கட ரமண சுவாமி கோவிலில் நடந்து வரும் பிரம்மோத்சவத்தில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு புஷ்ப பல்லக்கு புறப்பட்டது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து பலவகையான மலர்களால் உருவாக்கப்பட்ட புஷ்ப பல்லக்கை, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவிந்தா கோஷத்துடன் சுமந்து சென்றனர். கீதா சாலை, பிரிசர்ட் சாலைகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
வழக்கத்தை விட பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் நேரடியாக ரோந்து பணியில் ஈடுபட்டு, விடிய விடிய கண்காணிப்பில் இருந்தார்.

