மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் அதிரடி இடமாற்றம்
மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் அதிரடி இடமாற்றம்
ADDED : மே 06, 2026 11:58 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: கர்நாடகாவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடக மாநில ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.,யாக பணியாற்றிய சந்தீப் பாட்டீல், வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருந்த சேத்தன் சிங் ரத்தோட், சி.ஐ.டி., பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக இனி பணி செய்வார்.
காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனுபம் அகர்வால், கர்நாடக மாநில ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
