sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 அரசு பஸ்சில் பயணித்த 2 பூனை குட்டிகளுக்கு டிக்கெட்

/

 அரசு பஸ்சில் பயணித்த 2 பூனை குட்டிகளுக்கு டிக்கெட்

 அரசு பஸ்சில் பயணித்த 2 பூனை குட்டிகளுக்கு டிக்கெட்

 அரசு பஸ்சில் பயணித்த 2 பூனை குட்டிகளுக்கு டிக்கெட்


ADDED : டிச 30, 2025 06:44 AM

Google News

ADDED : டிச 30, 2025 06:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரில் இருந்து மடிகேரிக்கு, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில், பெண் ஒருவர் இரு பூனை குட்டிகளுடன் பயணித்தார். அப்போது, பூனை குட்டிகளுக்கு தலா அரை டிக்கெட் கொடுத்த நடத்துநரின் செயலுக்கு சமூக வலைதளத்தில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைசூரில் இருந்து மடிகேரிக்கு கடந்த, 26ம் தேதி பெண் ஒருவர் தன் கைக்குழந்தையுடன் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்சில் பயணித்தார். அப்போது தன்னுடன், வீட்டில் வளர்க்கும் இரு பூனை குட்டிகளையும் கொண்டு வைத்திருந்தார்.

'சக்தி' திட்டத்தால், பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். அதேவேளையில், பெண் எடுத்து வந்திருந்த இரு பூனை குட்டிகளுக்கு தலா அரை டிக்கெட் எடுக்க வேண்டும் என்று நடத்துனர் கூறினார்.

அதற்கு பெண் பயணி, 'மடியில் தானே வைத்துள்ளேன்' என்றார். நடத்துனரோ, 'மடியில் இருந்தாலும், இருக்கையில் இருந்தாலும் டிக்கெட் எடுத்தே ஆக வேண்டும்' என்று கறாராக கூறியுள்ளார். இதையடுத்து அப்பெண் இரு அரை டிக்கெட் எடுத்தார். இதனை அப்பெண் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

சிலர், 'இனி பூனைகளுக்கு பாஸ் வாங்க வேண்டுமா; பூனைகள் பெண்ணாக இருந்தால், அவைகளும் இலவசமாக பயணித்திருக்கும்' என்று விமர்சித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us