/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அறிமுகமில்லாத நபர்கள் மாஸ்தி கிராமத்தில் நடமாட்டம்
/
அறிமுகமில்லாத நபர்கள் மாஸ்தி கிராமத்தில் நடமாட்டம்
அறிமுகமில்லாத நபர்கள் மாஸ்தி கிராமத்தில் நடமாட்டம்
அறிமுகமில்லாத நபர்கள் மாஸ்தி கிராமத்தில் நடமாட்டம்
ADDED : ஜன 25, 2026 05:22 AM
கோலார்: மாலுாரின், மாஸ்தி கிராமத்தில் அறிமுகமில்லாத நபர்கள் முகாமிட்டுள்ளனர். இவர்களில் வங்கதேசத்தவரும் இருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது. விசாரணை நடத்தும்படி கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.
கோலார் மாவட்டம், மாலுார் தாலுகாவின் மாஸ்தி கிராமத்தில் கடந்த சில நாட்களாக, அறிமுகமில்லாத நுாற்றுக்கணக்கான நபர்கள் நடமாடுகின்றனர். கிராமத்தில் ஷெட் போட்டு வசிக்கின்றனர். இவர்கள் யார் என, கிராமத்தினர் விசாரித்த போது, அசாம், மேற்கு வங்கம், பீஹார் மாநிலங்களில் இருந்து வந்திருப்பதாக கூறுகின்றனர். ஆனால் வங்கதேசத்தவராக இருக்கலாம் என, சந்தேகம் எழுந்துள்ளது.
இவர்கள் போலியான ஆவணங்கள் தயாரித்து கொண்டு வந்திருக்கலாம் என, கிராமத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அந்நபர்கள் கோழிப்பண்ணைகள், செங்கல் தொழிற்சாலைகளில் வேலை செய்கின்றனர். அறிமுகமில்லாத நபர்கள் நடமாட்டத்தால், மாஸ்தி கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், அங்கு வந்து ஆய்வு செய்து, விசாரணை நடத்த வேண்டும். சட்டவிரோத வங்க தேசத்தவராக இருந்தால், கைது செய்ய வேண்டும் என, கிராமத்தினர் வலியுறுத்துகின்றனர்.

