sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

5 ஐ.ஐ.டி.,க்கள் விரிவாக்கம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

/

5 ஐ.ஐ.டி.,க்கள் விரிவாக்கம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

5 ஐ.ஐ.டி.,க்கள் விரிவாக்கம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்

5 ஐ.ஐ.டி.,க்கள் விரிவாக்கம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்


ADDED : மே 09, 2025 12:32 AM

Google News

ADDED : மே 09, 2025 12:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தார்வாட் உட்பட நாட்டில் உள்ள ஐந்து ஐ.ஐ.டி.,க்களை விரிவுபடுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறி உள்ளார்.

புதுடில்லியில் மத்திய உணவு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அளித்த பேட்டி:

கர்நாடகாவின் தார்வாட், ஆந்திராவின் திருப்பதி, சத்தீஸ்கரின் பிலாய், ஜம்மு காஷ்மீரின் ஜம்மு, கேரளாவின் பாலக்காடு ஆகிய ஐந்து ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்காக, 11,828.79 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் கல்வி மற்றும் உள்கட்டமைப்பு திறன் விரிவுபடுத்தப்படும். புதிதாக 6,500 மாணவர்கள் கல்வி பயிலும் வாய்ப்பு உருவாக உள்ளது. தொழில் கல்வி தொடர்புகளை வலுப்படுத்த ஐந்து புதிய, அதிநவீன ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்கப்படும்.

இப்பணிகள் இந்த ஆண்டு இறுதியில் துவங்கி, 2029 வரை நடக்கும். 130 பேராசிரியர்கள் நியமிக்கப்படுவர். கடந்த பத்து ஆண்டுகளில், 23 ஐ.ஐ.டி.,களில் மாணவர்கள் சேர்க்கை 65 ஆயிரத்திலிருந்து 1.35 லட்சமாக அதிகரித்து உள்ளது. அதாவது, 100 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ஐ.ஐ.டி.,க்கள் விரிவாக்கத்தின் மூலம் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமின்றி, ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள் போன்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -






      Dinamalar
      Follow us