sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

வாகனங்கள் அதிவேகம் ரூ.2.30 லட்சம் அபராதம்

/

வாகனங்கள் அதிவேகம் ரூ.2.30 லட்சம் அபராதம்

வாகனங்கள் அதிவேகம் ரூ.2.30 லட்சம் அபராதம்

வாகனங்கள் அதிவேகம் ரூ.2.30 லட்சம் அபராதம்


ADDED : பிப் 04, 2025 06:36 AM

Google News

ADDED : பிப் 04, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: பெங்களூரில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 228 பேரிடமிருந்து 2.30 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

பெங்களூரில் மது அருந்திவிட்டு வாகனங்களை தாறுமாறாக ஓட்டுவது, அதிக ஒலி எழுப்பும் சைலன்சர்களை உபயோகப்படுத்துவது, மின்னல் வேகத்தில் பைக்கில் செல்வது என பொது மக்களை சிலர் பயமுறுத்தி வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, நகரின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் போக்குவரத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் பலர் பிடிபட்டனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.

இதன்படி, ஜன., 27 முதல் பிப்., 2 வரை நகரின் 50 போக்குவரத்து போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை நடந்தது.

இதில், 62,300 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 800 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக சென்ற 228 பேரிடம் இருந்து 2.30 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us