/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சுகாதார விழிப்புணர்வு அரங்கு புதிய முயற்சிக்கு வரவேற்பு
/
சுகாதார விழிப்புணர்வு அரங்கு புதிய முயற்சிக்கு வரவேற்பு
சுகாதார விழிப்புணர்வு அரங்கு புதிய முயற்சிக்கு வரவேற்பு
சுகாதார விழிப்புணர்வு அரங்கு புதிய முயற்சிக்கு வரவேற்பு
ADDED : டிச 12, 2025 06:53 AM

பெங்களூரு: சுகாதாரம் பற்றி விழிப்புணர்வு அளிக்கும் வகையில், புத்தக திருவிழாவில் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
கர்நாடக தமிழ் புத்தக திருவிழாவில் இம்முறை, சில புதுமைகளையும் புகுத்தி உள்ளனர். புத்தக திருவிழா நடக்கும் இடத்தின் நுழைவு வாயிலின் வலது பக்கத்தில், கர்நாடக அரசின் சுகாதார துறை சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அரங்கில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு, மக்களுக்கு வழங்கப்படுகிறது.
சுகாதார துறை கமிஷனரான தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகுமார் ஏற்பாட்டின் கீழ் அமைக்கப்பட்டு உள்ள அரங்கில், பெங்களூரு மாவட்ட சுகாதார கல்வி அதிகாரி எம்.ரேவண்ணா தலைமையிலான குழுவில், பெங்களூரு தெற்கு சுகாதார கல்வி அதிகாரி உமேஷ், பெங்களூரு கிழக்கு சுகாதார கல்வி கல்வி அதிகாரி விந்தியா, மூத்த சுகாதார ஆய்வு அதிகாரி தனஞ்ஜெய் கவுடா, மனநலம் தொடர்பான மருத்துவம் அளிக்கும் நர்சு அனிதா ஆகியோர் உள்ளனர்.
புத்தக திருவிழாவுக்கு வரும் மக்களுக்கு, கர்நாடக அரசிடம் இருந்து கிடைக்கும் சுகாதார சேவைகள் பற்றி எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். சிக்கன்குனியா, டெங்கு, மலேரியாவால் பாதிக்காமல் இருப்பது எப்படி; மார்பக, வாய் புற்றுநோய் வராமல் முன்எச்சரிக்கையாக இருப்படி எப்படி; காசநோய் பரவாமல் தடுப்பது எப்படி ஆகியவை பற்றி எடுத்து கூறுகின்றனர்.
இதுதவிர பிரசவத்தின் போது தாய், சேய் மரணம் ஏற்படாமல் தடுப்பது தொடர்பாக அமைக்கப்பட்டு உள்ள, ஹில்ஹாரி செயலி பற்றியும்; அவசர உதவி எண் 14423 பற்றியும், அரசிடம் இருந்து கர்ப்பிணியருக்கு கிடைக்கும் சேவைகள் பற்றியும் சொல்கின்றனர்.
மனஅழுத்தத்தில் இருப்பவர்கள் தற்கொலை செய்வதை தடுக்கவும், அவர்கள் மனம் விட்டு பேசவும் அரசு அறிமுகப்படுத்தி உள்ள 14416 பற்றியும் விளக்கமாக கூறுகின்றனர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.
மேலும் விபரங்களுக்கு: 99015 10676, 97407 27399

