sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கர்நாடக அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை என்ன ஆகும்?: மத்திய அரசே நடத்த முடிவு செய்துள்ளதால் புது குழப்பம்

/

கர்நாடக அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை என்ன ஆகும்?: மத்திய அரசே நடத்த முடிவு செய்துள்ளதால் புது குழப்பம்

கர்நாடக அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை என்ன ஆகும்?: மத்திய அரசே நடத்த முடிவு செய்துள்ளதால் புது குழப்பம்

கர்நாடக அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை என்ன ஆகும்?: மத்திய அரசே நடத்த முடிவு செய்துள்ளதால் புது குழப்பம்


ADDED : மே 02, 2025 05:45 AM

Google News

ADDED : மே 02, 2025 05:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவில் 2013ல் சித்தராமையா, முதன் முறையாக முதல்வரான போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தார். இந்த பொறுப்பை பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையத்திடம் ஒப்படைத்தார். இதன்படி, 2015ல் ஆணையமும் ஆய்வு பணியில் ஈடுபட்டது. அறிக்கை தாக்கல் செய்வதற்குள் அரசு மாறியது.

காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு, அதை தொடர்ந்து பா.ஜ., அரசு வந்தது. அந்த அரசுகள் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை பற்றி சிந்திக்கவில்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையத்திடம் அறிக்கையை பெறுவதிலும், ஆர்வம் காட்டவில்லை. அதன்பின், 2023ல் மீண்டும் காங்கிரஸ் அரசு வந்தது.

முதல்வர் உத்தரவுப்படி, ஜாதிவாரி அறிக்கையை பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் ஆணையம், கர்நாடக அரசிடம் தாக்கல் செய்தது. இதை அமைச்சரவையில் தாக்கல் செய்ய, அரசு முடிவு செய்த போது, எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதை அரசு பொருட்படுத்தவில்லை. கடந்த மாதம் அமைச்சரவையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இதை அங்கீகரிப்பதா, நிராகரிப்பதா என்பது குறித்து அமைச்சரவையில் முடிவு செய்யப்படவில்லை. அமைச்சகர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே, இதற்கு காரணம். இதற்கிடையே அறிக்கையில் உள்ளதாக கூறப்படும் அம்சங்கள் ஊடகங்கள் மூலமாக கசிந்தது.

அறிக்கையில் சிறுபான்மை சமுதாயத்தினர் அதிகமாகவும், பிரபலமான லிங்காயத், ஒக்கலிகர் சமுதாயங்கள் குறைத்து காட்டப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இதனால் எதிர்க்கட்சியினர், லிங்காயத், ஒக்கலிக மடாதிபதிகள், அரசியல் தலைவர்கள் பலரும் அதிருப்தி அடைந்தனர்.

லிங்காயத், ஒக்கலிகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களே, அறிக்கையில் சந்தேகம் தெரிவித்தனர். 'எங்கள் தொகுதியிலேயே லிங்காயத் சமுதாயத்தினர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஆணையம் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தவில்லை. கோடிக்கணக்கான மக்கள் ஆய்வில் இருந்து விடுபட்டுள்ளனர்' என, குற்றம்சாட்டினர்.

எதிர்க்கட்சிகளும், 'இது விவேகமற்ற ஆய்வறிக்கை. இது வீடு வீடாக சென்று நடத்தப்பட்ட ஆய்வறிக்கை அல்ல. மாறாக முதல்வர் சித்தராமையா உத்தரவுப்படி தயாரான அறிக்கை. இதை அங்கீகரித்தால், மாநிலத்தில் பெரும் புரட்சியே ஏற்படும்' என, எச்சரித்தன.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்த முடிவு செய்துள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம், மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இதனால், கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்ட ஆணையம் தயாரித்த ஜாதிவாரி அறிக்கைக்கு சட்ட அங்கீகாரம் இருக்குமா, இருக்காதா. இதை அங்கீகரிப்பதா, நிராகரிப்பதா என்ற கேள்வி சித்தராமையாவுக்கு எழுந்துள்ளது.

மேலும், மத்திய அரசு கணக்கெடுப்பு நடத்தி, அறிக்கை வெளியிட, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகலாம். அதற்குள் இந்த அறிக்கை குறித்து, மாநில அரசு எடுக்கும் முடிவுகள் செல்லுமா என, பல கேள்விகள் எழுந்துள்ளன.

ஏற்கனவே அறிக்கையை கண்டித்து, போராட்டங்கள் நடந்துள்ளன. இதை பொருட்படுத்தாமல் அங்கீகரித்தால், பலரும் நீதிமன்றத்தை நாடுவது உறுதி. நீதிமன்றத்தில் பாதகமான தீர்ப்புகள் வெளியானால், தர்மசங்கடத்தில் சிக்க வேண்டி வரும்.

சில அமைப்புகள், மத்திய அரசின் கணக்கெடுப்பு அறிக்கைக்காக காத்திராமல், மாநில அரசின் அறிக்கைப்படி, உள்ளாட்சிகளில் இட ஒதுக்கீடு நிர்ணயிக்கும்படி வலியுறுத்துகின்றன.

இதனால், கடும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள கர்நாடக அரசு, சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை பெற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.






      Dinamalar
      Follow us