/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஒயிட்பீல்டு - செல்லகட்டா மெட்ரோ ரயில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
/
ஒயிட்பீல்டு - செல்லகட்டா மெட்ரோ ரயில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஒயிட்பீல்டு - செல்லகட்டா மெட்ரோ ரயில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ஒயிட்பீல்டு - செல்லகட்டா மெட்ரோ ரயில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
ADDED : அக் 30, 2025 11:11 PM

பெங்களூரு:  பெங்களூரு ஒயிட்பீல்டு - செல்லகட்டா இடையேயான மெட்ரோ ரயிலில், தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெங்களூரு, இளஞ்சிவப்பு மெட்ரோ ரயில் பாதையில், மெஜஸ்டிக்கில் இருந்து புறப்பட்ட ரயில், தொழில்நுட்ப பிரச்னையால், நேற்று காலை 9:15 மணிக்கு விஜயநகர் - அத்திகுப்பே இடையே நின்றது. இதனால், மெஜஸ்டிக்கில் இருந்து செல்லகட்டா இடையே போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
ஐந்து நிமிடங்களில் சரியாகிவிடும் என்று பயணியர் எதிர்பார்த்தனர். ஆனால், அரைமணி நேரமாகியும் சரியாகவில்லை. இதனால், இவ்வழித்தடத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணியர் குவிந்தனர். அப்போது மெட்ரோ ரயிலுக்குள் இருந்த எல்.இ.டி., திரையில், 'தாமதத்துக்கு வருந்துகிறோம். விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, அறிவிப்பு வெளியானது.
மெட்ரோ ரயில் நிலையத்தில் அதிகளவில் பயணியர் இருந்ததால், பலர் வெளியே நின்று கொண்டனர். ரயிலுக்காக வந்தவர்களும் வெளியே நின்றனர். டிக்கெட் விற்பனையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இதனால் பணிக்கு செல்வோர், தங்கள் அலுவலகங்களுக்கு போன் செய்து, விபரத்தை கூறி, தாமதமாகுமென விளக்கினர். சில பயணியர் பலர், பஸ், ஆட்டோவில் அவரவர் செல்ல வேண்டிய இடத்துக்கு புறப்பட்டனர்.
ஒரு மணி நேரத்துக்கு பின், 10:15 மணிக்கு மீண்டும் ரயில்கள் வழக்கம் போல் இயங்க துவங்கின.

