ADDED : மார் 23, 2026 01:44 AM
அ நிறம் | அளவு
சிக்கபல்லாபூர்: விவாகரத்து வழங்க மறுத்ததால், மர்ம உறுப்பில் மிதித்து கணவரை, காதல் மனைவி கொல்ல முயன்று உள்ளார்.
சிக்கபல்லாபூரின் சிந்தாமணி வெங்கடராயனகோட்டை கிராமத்தில் வசிப்பவர் முனீந்திரா, 25. இவரும், வர்ஷா, 23, என்பவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்தனர்.
சில நாட்களாக இருவருக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு நடந்த தகராறின் போது, கணவரிடம் இருந்து மனைவி விவாகரத்து கேட்டு உள்ளார்.
இதற்கு கணவர் மறுத்ததால், கோபம் அடைந்த மனைவி, கணவரின் மர்ம உறுப்பில் மிதித்து விட்டு தப்பினார். மயங்கி விழுந்த முனீந்திராவை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை விஷம் குடித்து, வர்ஷாவும் தற்கொலைக்கு முயன்றார்.
