ADDED : அக் 09, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெலகாவி: சொத்து தகராறில், கணவரின் கார் மீது பெட்ரோல் ஊற்றி, மனைவி தீ வைத்தார்.
பெலகாவியின் சிக்கோடி போகத்தியனஹட்டி கிராமத்தை சேர்ந்த சிவனகவுடா பாட்டீல்; விவசாயி. இவரது மனைவி சாவித்ரி. சொத்து ஒன்றை விற்பது தொடர்பாக, தம்பதி இடையே சில நாட்களாக பிரச்னை இருந்தது.
ஒரே வீட்டில் இருந்தாலும், இருவரும் பேசிக் கொள்ளவில்லை. நேற்று காலை சிவனகவுடா கார் மீது, பெட்ரோலை ஊற்றி சாவித்ரி தீ வைத்தார்.
கார் முற்றிலும் எரிந்து நாசமானது. கார் எரிவதை பார்த்து சிவனகவுடா கதறி அழும் வீடியோ வெளியாகி உள்ளது.