ADDED : நவ 25, 2025 06:05 AM

அ நிறம் | அளவு
கோவிந்தராஜ் நகர்: பெலகாவியை சேர்ந்தவர்கள் மாயப்பா, 29, ரேகா, 27, தம்பதி. தம்பதிக்கு 4 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர். இவர்கள் பெங்களூரு கோவிந்தராஜ் நகருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் குடிபெயர்ந்தனர். கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தில் மாயப்பா மார்ஷலாக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களாக தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
கடந்த 22ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேகா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவிந்தராஜ் நகர் போலீசார் விசாரித்தனர். 'தங்கள் மகள் இறப்புக்கு மருமகன் மாயப்பாவே காரணம். அவர் தான் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்' என ரேகா பெற்றோர் புகார் செய்தனர். மாயப்பா மீது வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்ற னர்.
