sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மனைவி கொலை கணவர் சரண்

மனைவி கொலை கணவர் சரண்

மனைவி கொலை கணவர் சரண்


ADDED : மார் 27, 2025 05:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 05:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஹெக்டே நகர்: பெங்களூரில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த பின், போலீசில் சரணடைந்தார்.

பெங்களூரு ஹெக்டே நகரில் வசித்து வந்தவர் வேல ரமணி, 35. இவரது கணவர் சந்திரசேகர்; டாக்சி ஓட்டுநர். இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேல ரமணி பணியாற்றி வந்தார்.

அவர், எப்போது பார்த்தாலும் மொபைல் போனில் பேசிக் கொண்டிருப்பதை, சந்திரசேகர் கவனித்தார். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் காலையும், குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பின், இவ்விஷயம் தொடர்பாக தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கோபம் தலைக்கேரிய சந்திரசேகர், மனைவியின் கழுத்தை நெரித்தார். இதில் அவர் இறந்தார். பின், சம்பிகேஹள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று, மனைவியை கொன்றுவிட்டதாக கூறி, சரணடைந்தார். அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us