ADDED : மார் 22, 2026 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: ''பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அரசு பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாது,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.
மேற்காசியாவில் போர் பதற்றத்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் உயர்வால், அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்படும் என தகவல்கள் வெளியாகின.
இதற்கு பதிலளித்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், '' பஸ் டிக்கெ ட் கட்டணத்தை உயர்த்தி, பயணியருக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்க அரசு விரும்பவில்லை. டீசல் விலை சிறிது உயர்ந்ததால், டிக்கெட் கட்டணத்தை உயர்த்த மாட்டோம்,'' என்றார்.

