sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

கர்நாடகாவில் 29 முதல் மதுக்கடைகள் மூடல்?

/

கர்நாடகாவில் 29 முதல் மதுக்கடைகள் மூடல்?

கர்நாடகாவில் 29 முதல் மதுக்கடைகள் மூடல்?

கர்நாடகாவில் 29 முதல் மதுக்கடைகள் மூடல்?


ADDED : மே 24, 2025 11:07 PM

Google News

ADDED : மே 24, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள், வரும் 29ம் தேதி முதல் காலவரையின்றி மூடப்படும்' என, மது விற்பனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளில் நான்கு முறை மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது. நடப்பாண்டில் மட்டும் இரண்டு முறை உயர்த்தப்பட்டது.

200 சதவீதம்


கடந்த 15ம் தேதி, இந்தியாவில் தயாரிக்கப்படும் மதுபானங்களின் மீதான கலால் வரியை 195 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால், 180 மி.லி., அளவுள்ள குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 முதல் 15 ரூபாயும்; பீர் பாட்டிலுக்கு பத்து ரூபாய் விலை உயர்த்தப்பட்டது.

இதற்கு காரணம், நடப்பாண்டு பட்ஜெட்டில் கலால் துறைக்கு 40,000 கோடி ரூபாய் இலக்காக நிர்ணயிக்கப்பட்டதே. இந்த இலக்கை அடையவே, மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது.

கடந்த சில மாதங்களாக மதுபானங்களின் விற்பனை குறைந்துள்ளதாக மது விற்பனையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், புதிதாக பப், மதுபானக்கூடம், ரெஸ்டாரன்ட் ஆகியவற்றிற்கான உரிமம் பெறுவதற்கான ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை


இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, மது விற்பனையாளர் சங்கம் ஆலோசனை நடத்தியது.

மதுபானங்கள் மீதான கலால் வரியை குறைப்பது, புதிதாக உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை குறைப்பது குறித்து நாளை முதல்வர் சித்தராமையாவுடன் பேச்சு நடத்தப்படும்.

அப்போது சுமுக முடிவு எட்டப்படாவிடில், வரும் 29ம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் காலவரையின்றி மூடப்படும். இந்த முடிவுகளுக்கு மாநிலம் முழுவதும் உள்ள 12,600 மதுக்கடைகளின் உரிமையாளர்களில் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கொட்டும் வருவாய்

விற்பனையாளர்கள் ஆத்திரம்

மதுபானக்கூடம் மற்றும் ரெஸ்டாரன்ட் இரண்டும் சேர்ந்த கடைக்கு உரிமம் பெறுவதற்கான கட்டணம் 17.25 லட்சம் ரூபாய்; நட்சத்திர ஹோட்டலில் மதுபானம் விற்பதற்கான உரிமம் பெற 23 லட்சம் ரூபாய்; ஹோட்டல், தங்கும் விடுதிகளில் மதுபானம் விற்பதற்கான உரிமம் பெற 19.50 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது முன்னதாக வசூலிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக உள்ளதால், மது விற்பனையாளர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.



கடந்த சில ஆண்டுகளாக மது விற்பனை விபரம்

விற்பனையாளர்கள் ஆத்திரம்

மதுபானக்கூடம் மற்றும் ரெஸ்டாரன்ட் இரண்டும் சேர்ந்த கடைக்கு உரிமம் பெறுவதற்கான கட்டணம் 17.25 லட்சம் ரூபாய்; நட்சத்திர ஹோட்டலில் மதுபானம் விற்பதற்கான உரிமம் பெற 23 லட்சம் ரூபாய்; ஹோட்டல், தங்கும் விடுதிகளில் மதுபானம் விற்பதற்கான உரிமம் பெற 19.50 லட்சம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இது முன்னதாக வசூலிக்கப்பட்ட தொகையை விட அதிகமாக உள்ளதால், மது விற்பனையாளர்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.








      Dinamalar
      Follow us