/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தர்ஷன் மனைவிக்கு ஆபாச 'கமென்ட்' விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
/
தர்ஷன் மனைவிக்கு ஆபாச 'கமென்ட்' விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
தர்ஷன் மனைவிக்கு ஆபாச 'கமென்ட்' விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
தர்ஷன் மனைவிக்கு ஆபாச 'கமென்ட்' விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவு
ADDED : ஆக 30, 2025 03:24 AM

பெங்களூரு: முன்னாள் எம்.பி.,யும், நடிகையுமான ரம்யாவை தொடர்ந்து, நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமிக்கு, ஆபாச மெசேஜ்கள் வந்துள்ளன. இதுகுறித்து, மகளிர் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ரேணுகாசாமி வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் ஜாமினில் வெளியே வந்திருந்தார். இவரது ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், மீண்டும் கைதாகி சிறைக்கு செல்லும் நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக, நடிகை ரம்யா, 'சட்டத்தை விட யாரும் பெரியவர்கள் இல்லை. தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும்' என, கருத்துத் தெரிவித்தார்.
இதனால் எரிச்சல் அடைந்த தர்ஷனின் ரசிகர்கள், நடிகை ரம்யாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பினர். இதுகுறித்து, இவர் அளித்த புகாரின்படி, சிலரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையில் நடிகர் தர்ஷனின் மனைவி விஜயலட்சுமியை பற்றி, சமூக வலைதளங்களில் ஆபாசமாக கமென்ட் பரவி வருகிறது.
இதுகுறித்து, மகளிர் ஆணையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு, மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து, மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி கூறியதாவது:
விஜயலட்சுமி தர்ஷனை பற்றி, சமூக வலைதளங்களில் கீழ்த்தரமாக கமென்ட் செய்திருப்பது கண்டிக் கத்தக்கது.
முன்னாள் எம்.பி., ரம்யாவுக்கு, மர்ம நபர்கள் எப்படி ஆபாசமாக மெசேஜ் அனுப்பினார்களோ, அதே போன்று விஜயலட்சுமி குறித்தும் கமென்ட் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, விசாரணை நடத்தி, 15 நாட்களில் அறிக்கை அளிக்கும்படி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனருக்கு, மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
ரம்யா, விஜயலட்சுமி தர்ஷன் மட்டுமல்ல, எந்த பெண்களை பற்றி ஆபாசமாக கமென்ட் செய்தால், அவமதித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களின் கவுரவத்துக்கு களங்கம் ஏற்படுத்த, சமூக வலைதளங்களை பயன்படுத்தாதீர்கள். அவர்களை அவமதித்தால் சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

