/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தேவகவுடாவிடம் நலம் விசாரித்தார் எடியூரப்பா
/
தேவகவுடாவிடம் நலம் விசாரித்தார் எடியூரப்பா
ADDED : அக் 12, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: காய்ச்சல், சிறுநீர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தேவகவுடா, பெங்களூரின் மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
அரசியல் தலைவர்கள் உட்பட பலரும் நேரில் சென்று நலம் விசாரிக்கின்றனர். ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமிகள், நேற்று முன்தினம் சந்தித்து நலம் விசாரித்தார்.
முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகனும், மாநில பா.ஜ., தலைவருமான விஜயேந்திராவும், நேற்று மணிப்பால் மருத்துவமனைக்கு வந்து, தேவகவுடாவை சந்தித்து நலம் விசாரித்தனர்.