sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

வணிகத்திலிருந்து வெளியேறிய 15 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்

/

வணிகத்திலிருந்து வெளியேறிய 15 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்

வணிகத்திலிருந்து வெளியேறிய 15 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்

வணிகத்திலிருந்து வெளியேறிய 15 வங்கி சாரா நிதி நிறுவனங்கள்

1


ADDED : மே 11, 2024 12:21 AM

Google News

ADDED : மே 11, 2024 12:21 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை: கிட்டத்தட்ட 15 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வணிகத்திலிருந்து வெளியேறுவதாக கூறி தங்களுடைய பதிவு சான்றிதழ்களை திருப்பி ஒப்படைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளதாவது: 'டாடா கேப்பிட்டல் பைனான்சியல் சர்வீசஸ்' உள்ளிட்ட 15 வங்கி சாரா நிதி நிறுவனங்கள், பல்வேறு காரணங்களுக்காக, தங்கள் பதிவுச் சான்றிதழ்களை திருப்பி ஒப்படைத்துள்ளன. இதில், ஒன்பது வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ஒருங்கிணைப்பு, இணைப்பு, கலைப்பு அல்லது தானாக செயல்பாடுகளை நிறுத்துதல் உள்ளிட்ட காரணங்களால், சட்டப்பூர்வ நிறுவனங்களாக தொடர்வதை நிறுத்திக் கொண்டன.

இதையடுத்து, தற்போது ஆறு நிறுவனங்கள், வங்கி சாரா நிதி வணிகத்தில் இருந்து வெளியேறி, தங்களது பதிவு சான்றிதழ்களை ஒப்படைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் 15 வங்கி சாரா நிதி நிறுவனங்கள், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட, தங்களது பதிவு சான்றிதழ்களை திருப்பி அளித்துள்ளன. இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us