sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

நிதி மோசடி 3 மடங்கு அதிகரிப்பு

/

நிதி மோசடி 3 மடங்கு அதிகரிப்பு

நிதி மோசடி 3 மடங்கு அதிகரிப்பு

நிதி மோசடி 3 மடங்கு அதிகரிப்பு


ADDED : மே 29, 2025 11:58 PM

Google News

ADDED : மே 29, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை:ரிசர்வ் வங்கி, கடந்த 2024 - 25ம் நிதியாண்டுக்கான ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த நிதியாண்டை போலவே நடப்பு நிதியாண்டிலும், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம்


ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்கத்தின் மதிப்பு 57.12 சதவீதம் உயர்ந்து, 4.32 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மட்டும் 54.13 டன் தங்கத்தை வாங்கி உள்ளது. வங்கியின் மொத்த தங்க இருப்பு 879.58 டன்னாக அதிகரித்துள்ளது.

பணவீக்கம்


வினியோக தொடர் அழுத்தங்கள் குறைந்து வருவது, கச்சா எண்ணெய், தங்கம் உள்ளிட்டவற்றின் விலை குறைந்து வருவது மற்றும் வழக்கத்தை விட அதிக பருவமழையால் விவசாய உற்பத்தி அதிகரிக்கும்பட்சத்தில், பணவீக்கம் கட்டுக்குள் இருக்க வழிவகுக்கும்.

ஏற்றுமதி


பாதுகாப்பில் கவனம், வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணங்களால்ஏற்றுமதி பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனினும், பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களும் விரைவில் கையெழுத்தாக உள்ள ஒப்பந்தங்களும், தாக்கத்தை குறைக்கும்.

இருப்பு நிலை


ரிசர்வ் வங்கியின் இருப்பு நிலை 8.20 சதவீதம் உயர்ந்து 76.25 லட்சம் கோடி ரூபாயாக ஆனது. வருவாய் 22.77 சதவீதமும்; செலவினம் 7.76 சதவீதம் அதிகரித்துள்ளது. அன்னிய செலாவணி பரிவர்த்தனைகளில் இருந்து கிடைத்த வருவாய் 33 சதவீதம் அதிகரித்து 1.11 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது தவிர தங்கம், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளும் அதிகரித்துள்ளன.

இ - ருபி


இ - ருபி என அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் நாணயத்தின் புழக்கம், கடந்த நிதியாண்டில் 334 சதவீதம் அதிகரித்து 1,016 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 2022 நவம்பரில்சோதனை முறையில் துவங்கப்பட்ட இத்திட்டம் விரைவில் மேலும் விரிவுபடுத்தப் படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

அச்சு செலவு

அதிக புழக்கம்




(முதல் 3 நோட்டுகள்)

ரூ.500

40.90%

ரூ.10

16.40%

ரூ.100

14.70%

கடந்த நிதியாண்டில், புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு6 சதவீதமும்; எண்ணிக்கை 5.60 சதவீதமும் அதிகரித்தது. நாணயங்களின் மதிப்பு 9.60 சதவீதமும்; எண்ணிக்கை 3.60 சதவீதமும் அதிகரித்தது.






      Dinamalar
      Follow us