sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

'பின்டெக் நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ., எதிரானதல்ல'

/

'பின்டெக் நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ., எதிரானதல்ல'

'பின்டெக் நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ., எதிரானதல்ல'

'பின்டெக் நிறுவனங்களுக்கு ஆர்.பி.ஐ., எதிரானதல்ல'


ADDED : மார் 07, 2024 01:48 AM

Google News

ADDED : மார் 07, 2024 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: பேடிஎம் வங்கிக்கு தடைவிதித்ததை அடுத்து ரிசர்வ் வங்கி நிதி தொழில்நுட்ப நிறுவனங்களிடம் கடுமை காட்டுவதாக கருத்துகள் வெளியாகி உள்ளன. இதை அடுத்து இவ்விவகாரம் குறித்து சக்திகாந்த தாஸ் கூறியிருப்பதாவது:

ரிசர்வ் வங்கி, எந்த ஒரு நிதி தொழில்நுட்ப நிறுவனத்துக்கும் எதிரானது கிடையாது. இந்நிறுவனங்கள் வளர்ச்சியடைவதையே விரும்புகிறது.

பேடிஎம் வங்கி விவகாரத்தை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கியால் ஒழுங்குபடுத்தப்படும் ஒரு நிறுவனத்தின் மீதான நடவடிக்கை தானே தவிர, பின்டெக் நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை அல்ல.

பேடிஎம் வங்கியை மட்டுமே சார்ந்திருந்த 15 முதல் 20 சதவீத வாடிக்கையாளர்கள், மற்ற வங்கிகளுக்கு மாறி வருகின்றனர்.

நிதித்துறையில் இடையூறுகள் ஏற்படாமல் இருக்கவே, ரிசர்வ் வங்கி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நாட்டின் பின்டெக் துறை வளர்ச்சியை குறைக்க ரிசர்வ் வங்கி விரும்பவில்லை. இத்துறை, நிலையான வகையில் வேகமாக வளர்ச்சியடைவதை உறுதி செய்வதிலேயே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

இவ்வாறு கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us