sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

சக்கிமங்கலம் தொழிற்பேட்டை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

/

சக்கிமங்கலம் தொழிற்பேட்டை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

சக்கிமங்கலம் தொழிற்பேட்டை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு

சக்கிமங்கலம் தொழிற்பேட்டை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு


ADDED : ஜூலை 18, 2024 01:30 AM

Google News

ADDED : ஜூலை 18, 2024 01:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் தொழிற்பேட்டையில் தொழில் துவங்க, 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் செய்திருப்பதால், குலுக்கல் முறையில் மனைகளை ஒதுக்கீடு செய்ய, 'சிட்கோ' முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் சிட்கோ எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க தேவையான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டைகளை அமைக்கிறது. தமிழகம் முழுதும் சிட்கோ, 8,600 ஏக்கரில், 130 தொழிற்பேட்டைகளை நிர்வகித்து வருகிறது. அதன்படி, மதுரை மாவட்டம் சக்கிமங்கலத்தில், 33 ஏக்கரில், 98 தொழில் மனைகளுடன், சக்கிமங் கலம் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, மனைகளை விற்கும் பணி துவங்கிஉள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தின் மதிப்பு, 1.43 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பம் பெறப்பட்டதில், 200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர்.

ஒரு தொழில் மனைக்கு, மூன்று, நான்கு பேர் போட்டி யிடுகின்றனர். இதனால் குலுக்கல் முறையில் தேர்வாகும் நபர்களுக்கே மனைகளை ஒதுக்கீடு செய்ய சிட்கோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.






      Dinamalar
      Follow us