sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

சென்னையில் லேப்டாப் ஆலை 'டிக்சன்' நிறுவனம் அமைக்கிறது

/

சென்னையில் லேப்டாப் ஆலை 'டிக்சன்' நிறுவனம் அமைக்கிறது

சென்னையில் லேப்டாப் ஆலை 'டிக்சன்' நிறுவனம் அமைக்கிறது

சென்னையில் லேப்டாப் ஆலை 'டிக்சன்' நிறுவனம் அமைக்கிறது


ADDED : ஆக 02, 2024 12:18 AM

Google News

ADDED : ஆக 02, 2024 12:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:'டிக்சன் டெக்னாலஜிஸ்' நிறுவனம், லேப்டாப் தயாரிப்புக்காக, சென்னையில் புதிய ஆலை ஒன்றை திறக்க உள்ளதாக, அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.

'நோட்புக்' தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நான்கு நிறுவனங்களுக்காக, லேப்டாப்களை டிக்சன் தயாரித்து வழங்க உள்ளதாகவும்; இதற்காக சென்னையில் புதிய ஆலை ஒன்றை நிறுவ உள்ளதாகவும் இந்நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான அதுல் பி லால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது:

சென்னையில் லேப்டாப் தயாரிப்பு ஆலைக்கான இடம் அடையாளம் காணப்பட்டு, அது கையகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த எட்டு முதல் 10 மாதங்களில், இந்த ஆலை செயல்படும். தற்போது, 'ஏசர்' நிறுவனத்துக்காக, நோட்புக்குகளை தயாரித்து வருகிறோம். முதற்கட்டமாக, 'லெனோவா' நிறுவனத்துக்கான லேப்டாப்களை தயாரித்து வழங்குவதற்கான முயற்சியையும் துவங்கியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us