sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

மூன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தயாரிப்பு துறையின் சிறப்பான செயல்பாடுகள்

/

மூன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தயாரிப்பு துறையின் சிறப்பான செயல்பாடுகள்

மூன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தயாரிப்பு துறையின் சிறப்பான செயல்பாடுகள்

மூன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக தயாரிப்பு துறையின் சிறப்பான செயல்பாடுகள்


ADDED : மே 03, 2024 01:54 AM

Google News

ADDED : மே 03, 2024 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்தியாவின் தயாரிப்புத்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில் சற்றே குறைந்துள்ளது. எனினும், கடந்த மூன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக, ஏப்ரல் மாதத்தில் நிறுவனங்களின் செயல்பாடுகள் வேகமாக விரிவடைந்து உள்ளன.

எச்.எஸ்.பி.சி., வங்கி உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடு குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம் இதற்கான தரவுகளை திரட்டி வருகிறது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான எஸ் அண்டு பி., - பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஏப்ரல் மாதத்தில் 58.80 புள்ளிகளாக இருந்தது. இதற்கு முந்தைய மார்ச் மாதத்தில் பி.எம்.ஐ., குறியீடு, 59.10 புள்ளிகளாக இருந்தது.

இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்; 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவை குறிக்கும்.

வலுவான தேவை காரணமாக, ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி அதிகரித்தது. இது, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறைவே என்றாலும், ஏப்ரல் மாதத்தில் நிறுவனங்களின் செயல்பாடுகள், கடந்த மூன்றரை ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வேகமாக விரிவடைந்தன.

கடந்த மாதம் இந்திய தயாரிப்பாளர்களுக்கு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடமிருந்து தேவை வலுவாக இருந்தது.

புதிய ஆர்டர்கள் கடந்த 2021ம் ஆண்டுக்கு பின் இரண்டாவது முறையாக அதிகரித்து காணப்பட்டது.

வலுவான தேவையின் பின்னணியில், எதிர்கால வணிக கண்ணோட்டம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில், நிறுவனங்கள் கடந்த மாதம் கூடுதல் ஊழியர்களை பணியமர்த்தின.

மூலப் பொருட்கள் மற்றும் பணியாளர்களுக்கான செலவுகள் அதிகரித்ததன் காரணமாக, தயாரிப்பாளர்கள் கடந்த மாதம் பொருட்களின் விற்பனை விலையை அதிகரித்தனர்.

தேவை வலுவாக இருந்த காரணத்தால், இது தயாரிப்பாளர்களின் லாபத்தை மேம்படுத்தியது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்களின் செயல்பாடுகள், ஏப்ரல் மாதத்தில், கடந்த மூன்றரை ஆண்டுகளில், இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளன






      Dinamalar
      Follow us