sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ஏலக்காய் விவசாயிகளுக்கு புதிய செயலி அறிமுகம்

/

ஏலக்காய் விவசாயிகளுக்கு புதிய செயலி அறிமுகம்

ஏலக்காய் விவசாயிகளுக்கு புதிய செயலி அறிமுகம்

ஏலக்காய் விவசாயிகளுக்கு புதிய செயலி அறிமுகம்


ADDED : செப் 13, 2024 01:22 AM

Google News

ADDED : செப் 13, 2024 01:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இடுக்கி: மத்திய அரசின் கீழ் இயங்கும் 'ஸ்பைசஸ் போர்டு ஆப் இந்தியா' நிறுவனம், ஏலக்காய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், 'கார்ட்ஸ்ஆப்' எனும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள, இந்திய ஏலக்காய் ஆராய்ச்சி நிறுவனத்தில், மசாலா பொருட்கள் தொடர்பான மாநாடு நடைபெற்றது. அதில், ஏலக்காய் சாகுபடிக்கு புகழ்பெற்ற உடும்பஞ்சோலா மற்றும் இடுக்கி தாலுகாக்களில் உள்ள 19 கிராமங்களில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து, மண் வள வரைபடம் உட்பட முக்கியமான மண் பரிசோதனை முடிவுகளை வழங்கும் 'கார்ட்ஸ்ஆப்' அறிமுகப்படுத்தப்பட்டது.

விவசாயிகளுக்கு தரவு சார்ந்த தகவல்களை வழங்குவதன் வாயிலாக, உற்பத்தியை அதிகரிப்பதில், இந்த செயலி முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலக்காய் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்தவும் இந்த செயலி உதவும்.






      Dinamalar
      Follow us