sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

எஸ்.ஐ.பி., வாயிலாக முதலீடு ஆகஸ்டில் புதிய உச்சம்

/

எஸ்.ஐ.பி., வாயிலாக முதலீடு ஆகஸ்டில் புதிய உச்சம்

எஸ்.ஐ.பி., வாயிலாக முதலீடு ஆகஸ்டில் புதிய உச்சம்

எஸ்.ஐ.பி., வாயிலாக முதலீடு ஆகஸ்டில் புதிய உச்சம்


ADDED : செப் 10, 2024 11:15 PM

Google News

ADDED : செப் 10, 2024 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு, கடந்த ஆகஸ்ட் மாதம் 3 சதவீதம் அதிகரித்து 38,239 கோடி ரூபாயாக இருந்தது என 'ஆம்பி' எனும் இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலையில் முதலீடு 37,113 கோடி ரூபாயாக இருந்தது.

எனினும், ஜூலையில் 1.90 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த முதலீடு, கடந்த மாதம் 1.08 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

கடன் சார்ந்த திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் பெருவாரியாக குறைந்ததே, கடந்த மாதம் மொத்த முதலீடுகள் குறைய காரணமாக அமைந்தது.

கடந்த ஜூலையில் கடன் சார்ந்த திட்டங்களில், 1.20 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஆகஸ்டில் இது 62 சதவீதம் சரிந்து, 45,169 கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த மாதத்துடன் சேர்த்து, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் சொத்துக்களின் நிகர மதிப்பு, 66.70 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டிஉள்ளது.

சீரான முதலீட்டு முறையான எஸ்.ஐ.பி., வாயிலாக ஆகஸ்டில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 23,547 கோடி ரூபாயாக புதிய உச்சம் கண்டுள்ளது.






      Dinamalar
      Follow us