sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

சிறு நிதி வங்கிகளுக்கு வாய்ப்பு

/

சிறு நிதி வங்கிகளுக்கு வாய்ப்பு

சிறு நிதி வங்கிகளுக்கு வாய்ப்பு

சிறு நிதி வங்கிகளுக்கு வாய்ப்பு


ADDED : ஏப் 26, 2024 11:46 PM

Google News

ADDED : ஏப் 26, 2024 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: சிறு நிதி வங்கிகள், வழக்கமான வங்கிகளாக செயல்பட நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது, இதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, ரிசர்வ் வங்கி அழைப்பு விடுத்துள்ளது.

'எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி, ஏ.யு., ஸ்மால் பைனான்ஸ் வங்கி' போன்ற பல சிறு நிதி வங்கிகள், இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இவ்வங்கிகள், வழக்கமான வங்கிகளாக செயல்பட விருப்பம் தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், பெரிய வங்கிகளாக செயல்பட விரும்பும், சிறு நிதி வங்கிகள், தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு, ரிசர்வ் வங்கி தற்போது அழைப்பு விடுத்துள்ளது.

வழக்கமான வங்கியாக தகுதி பெற, குறைந்தபட்ச நிகர மதிப்பு, மதிப்பாய்வு செய்யப்பட்ட காலாண்டின் முடிவில், 1,000 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். வங்கியின் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டு இருக்க வேண்டும்.

இது தவிர, பரிந்துரைக்கப்பட்ட சி.ஆர்.ஏ.ஆர்., விகிதம், ஐந்து ஆண்டுகளுக்கு சிறப்பான செயல்பாடு என மற்ற சில நிபந்தனைகளும் உண்டு.






      Dinamalar
      Follow us