ADDED : மார் 03, 2025 07:02 AM

மும்பை : பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக, செபியின் முன்னாள் தலைவர் மாதவி புரி புச்சுக்கு எதிராக வழக்கு தொடர, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செபியின் முன்னாள் தலைவர் மாதவி புரி புச் தனது பதவி காலத்தின் கடைசி சில மாதங்களில் முறைகேடு செய்ததாக, ஏராளமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
இந்நிலையில், பங்குச் சந்தையில் ஒரு நிறுவனத்தை பட்டியலிடுவதில் பெரிய அளவிலான நிதி மோசடி மற்றும் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டி, தானேவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் மும்பை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
புகார் மற்றும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்த நீதிமன்றம், தவறு செய்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக கண்டறிந்தது.
இதைத்தொடர்ந்து, மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் குறித்து, செபியின் முன்னாள் தலைவர் மாதவி புரி புச் மற்றும் மும்பை பங்குச் சந்தை அதிகாரிகள் 5 பேர் மீது எப்.ஐ.ஆர்., பதிவு செய்து வழக்கு தொடர, நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், வழக்கு விசாரணை குறித்த அறிக்கையை 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.