ADDED : ஏப் 06, 2024 09:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:மாலத்தீவுக்கான அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா எடுத்த முடிவுக்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகள் இடையே சிக்கல்கள் நிலவிவந்த போதிலும் , 2024--25 நிதியாண்டுக்கான ஏற்றுமதியை அதிகரித்து அனுமதி வழங்கி உள்ளது இந்தியா.
இதுகுறித்து மூசா ஜமீர் கூறியிருப்பதாவது:
நடப்பு 2024-25ம் ஆண்டுக்கான பல்வேறு அத்தியாவசிய பொருட்களை, இறக்குமதி செய்வதற்கான தடைகளை நீக்கி, ஒதுக்கீட்டை புதுப்பித்ததற்கு இந்திய அரசுக்கு நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார்.

