sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

வர்த்தக வரவு தள்ளுபடி திட்டத்தில் சேர்க்க உள்ளாட்சி பணி நிறுவனங்கள் கோரிக்கை

/

வர்த்தக வரவு தள்ளுபடி திட்டத்தில் சேர்க்க உள்ளாட்சி பணி நிறுவனங்கள் கோரிக்கை

வர்த்தக வரவு தள்ளுபடி திட்டத்தில் சேர்க்க உள்ளாட்சி பணி நிறுவனங்கள் கோரிக்கை

வர்த்தக வரவு தள்ளுபடி திட்டத்தில் சேர்க்க உள்ளாட்சி பணி நிறுவனங்கள் கோரிக்கை


ADDED : ஜூன் 14, 2024 01:36 AM

Google News

ADDED : ஜூன் 14, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக அரசின் வர்த்தக வரவு தள்ளுபடி திட்டத்தின் கீழ், அதிக எண்ணிக்கையிலான சிறு தொழில் நிறுவனங்கள் பயன் பெற, உள்ளாட்சி அமைப்புகளில் பணிகளை மேற்கொள்ளும் குறு, சிறு தொழில் நிறுவனங்களும் இடம்பெற செய்வதற்கான கோரிக்கை எழுந்து உள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் இருந்து பல்வேறு பொருட்களை வாங்குகின்றன. மேலும் கட்டுமானம் உள்ளிட்ட ஒப்பந்த பணிகளையும் அவற்றுக்கு வழங்குகின்றன.

தள்ளுபடி திட்டம்


அதற்கான விற்பனை தொகையை, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு, அரசு நிறுவனங்கள் குறித்த காலத்திற்குள் தருவதில்லை. இதனால், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, 'டி.என்.டிரெட்ஸ்' எனப்படும் வர்த்தக வரவு தள்ளுபடி திட்டத்தை துவக்கியது.

இதற்கான இணையதளத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், பல்வேறு வங்கிகள் ஆகியவை இணைந்துள்ளன.

ஒரு நிறுவனம் தனக்கு வர வேண்டிய விற்பனை தொகை தொடர்பான ஆவணங்களை, 'டி.என்.டிரெட்ஸ்' தளத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதனிடம் இருந்து பணியை பெற்ற அரசு நிறுவனம் ஒப்புதல் அளிக்கும்.

அதை தொடர்ந்து, அந்நிறுவனம் வழங்க வேண்டிய விற்பனை தொகையை வங்கிகள் வழங்க முன்வரும். இதற்காக, ஒவ்வொரு வங்கியும், 5 சதவீதம், 10 சதவீதம் என, குறிப்பிட்ட சதவீத தொகையை தள்ளுபடியாக கேட்கும்.

தனக்கு ஏற்ற தள்ளுபடி தொகை தரும் வங்கியை, நிறுவனம் தேர்வு செய்ய வேண்டும். அந்த தள்ளுபடி தொகை போக, மீதி தொகையை வங்கி, 48 மணி நேரத்திற்குள் நிறுவனத்தின் வங்கி கணக்கில் செலுத்தும்.

கோரிக்கை


இத்திட்டத்தில், அதிக சிறு நிறுவனங்கள் பயன் பெற, உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களும் இடம்பெற நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு, தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துஉள்ளன.

இதுகுறித்து, தொழில்முனைவோர்கள் கூறியதாவது:

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, அரசு துறைகளில் செய்த சேவைக்கு உடனடி பணம் கிடைக்கவே, வர்த்தக வரவு தள்ளுபடி தளம் அமல்படுத்தப்பட்டது. அந்த தளத்தில் இதுவரை, 98 அரசு நிறுவனங்களும், துறைகளும் இடம்பெற்றுள்ளன.

பாதிப்பு


உள்ளாட்சி அமைப்பு களின் கீழ் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றுக்கான பல்வேறு ஒப்பந்த பணிகளை தொழில் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

பல உள்ளாட்சி அமைப்புகள், குறித்த காலத்தில் பணம் தராததால், சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே, உள்ளாட்சி அமைப்புகளுக்கு பொருட்கள் சப்ளை மற்றும் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களையும், உலக வங்கி நிதியுதவியில் செயல்படுத்தும் திட்டங்களை மேற்கொள்ளும் நிறுவனங்களையும், வர்த்தக தள்ளுபடி தளத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது தான், அரசு துறைகளில் அனைத்து மட்டத்திலும் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் சிறு நிறுவனங்கள் பயன் பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பதிவும் நிதியும்


கடந்த மார்ச் நிலவரப்படி, வர்த்தக தள்ளுபடி தளத்தில், 1,490 சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பதிவு செய்துஉள்ளன. அதில், 936 நிறுவனங்களுக்கு, 2,139 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us