sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

அரிசி ஏற்றுமதி 34% சரிவு

/

அரிசி ஏற்றுமதி 34% சரிவு

அரிசி ஏற்றுமதி 34% சரிவு

அரிசி ஏற்றுமதி 34% சரிவு


ADDED : ஜூலை 04, 2024 01:51 AM

Google News

ADDED : ஜூலை 04, 2024 01:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், இந்தியாவின் அரிசி ஏற்றுமதி 34 சதவீதம் குறைந்துஉள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில், பாசுமதி அல்லாத பச்சரிசி ஏற்றுமதி 78 சதவீதம் சரிந்து, கிட்டத்தட்ட மூன்று லட்சம் டன்னாக இருந்தது.

இதேபோல் குருணை அரிசி ஏற்றுமதியும், 8 சதவீதம் சரிந்து, மூன்று லட்சம் டன்னாக இருந்தது. இதே காலகட்டத்தில், புழுங்கல் அரிசி ஏற்றுமதி, 11 சதவீதம் சரிந்து, 15 லட்சம் டன்னாக இருந்தது.

கடந்த 2022 செப்டம்பரில், குருணை அரிசி ஏற்று மதிக்கு, மத்திய அரசு தடை விதித்தது. பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கும் கடந்தாண்டு ஜூலையில் தடை விதிக்கப்பட்டது. இதுபோக, புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு, மத்திய அரசு 20 சதவீதம் வரி விதித்து இருந்தது.

ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட இத்தடைகளே, அரிசி ஏற்றுமதி குறைந்ததற்கு காரணமாகக் கூறப்படுகிறது.

அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கம் உள்ளிட்ட வர்த்தக அமைப்புகள், அரிசி மீதான ஏற்றுமதி தடையை நீக்கக்கோரி, மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், நிலையான வரியில் ஏற்றுமதியை அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us