ADDED : மார் 12, 2025 12:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் சிறு, குறு, நடுத்தர பிரிவுகளில் புதிய தொழில்களை துவக்கவும், ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபடவும், 'டிக்' எனப்படும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் கடன் வழங்குகிறது. இந்த கடன்களுக்கு அரசின் மானிய சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
நடப்பு, 2024 - 25ம் நிதியாண்டில், 2,100 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு, 'டிக்' திட்டமிட்டது. கடந்த வாரம் வரை, 2,000 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 1,583 கோடி ரூபாய்க்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கு, 10.95 சதவீதத்தில் இருந்து வட்டி உள்ளது. இன்னும், 20 நாட்களில் இந்த நிதியாண்டு முடிவடைகிறது. எனவே, தகுதியான பயனாளிகளுக்கு விரைந்து கடன்களை வழங்கும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.