sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பாக்ஸ்கான் பேட்டரி ஆலை தமிழக அரசுடன் பேச்சு

/

பாக்ஸ்கான் பேட்டரி ஆலை தமிழக அரசுடன் பேச்சு

பாக்ஸ்கான் பேட்டரி ஆலை தமிழக அரசுடன் பேச்சு

பாக்ஸ்கான் பேட்டரி ஆலை தமிழக அரசுடன் பேச்சு


ADDED : ஆக 19, 2024 01:01 AM

Google News

ADDED : ஆக 19, 2024 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

-ஸ்ரீபெரும்புதுார்:தைவானைச் சேர்ந்த மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனமான 'பாக்ஸ்கான்', இந்தியாவில் 'பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம்' எனப்படும் பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புக்கான ஆலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவர் யங் லியு தெரிவித்துஉள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:

இந்தியாவில் தற்போதுதான் பாக்ஸ்கானின் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பிரிவு துவங்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் ஆலை அமைப்பது குறித்து, இங்குள்ள தொழில்துறை அமைச்சருடன் பேசி வருகிறோம்.

மின்சார வாகன பயன்பாட்டை கருத்தில் கொண்டு, பாக்ஸ்கான் பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் வணிகத்தில் அதிக கவனம் செலுத்துகிறது.

இந்த ஆலை சூரிய சக்தி, காற்று போன்ற புதுப்பிக்கத் தக்க மூலங்களில் இருந்து ஆற்றல் சேமிப்பை மேற்கொள்ளும் வகையில் செயல் படுத்தப்படும். இந்தியாவிலும் மின்சார வாகன ஆலை அமைக்க பாக்ஸ்கான் முன் வந்துள்ளது. இது மிக விரைவில் துவங்கும்.

இவ்வாறு தெரிவித்தார்.

மின் வாகன பிரிவை கருத்தில் கொண்டு, பாக்ஸ்கான் தனது பேட்டரி உற்பத்தி வணிகத்தை விரிவுபடுத்தி வருகிறது. இதன் முதல் ஆலை ஏற்கனவே தைவானில் அமைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us