ADDED : ஜூன் 15, 2024 09:50 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:திறன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களினால் காலி பணியிடங்களை நிரப்ப முடியாமல் டி.சி.எஸ்., தடுமாறி வருகிறது.
தற்போதைய பணியாளர்களின் திறனுக்கும், தேவைப்படும் திறனுக்கும் இடையேயான வேறுபாடு காரணமாக கிட்டத்தட்ட 80,000 பணியிடங்களை நிரப்ப முடியாமல் டி.சி.எஸ்., திணறி வருகிறது.
இதனால் கடந்த 2 ஆண்டுகளாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பணியமர்த்தப்படாமல் உள்ளனர். டி.சி.எஸ்., மட்டுமல்லாமல் பிற ஐ.டி., நிறுவனங்களிலும் இதே நிலை தொடர்வதாகக் கூறப்படுகிறது.