ADDED : ஜூலை 12, 2025 10:37 PM

புதுடில்லி:ரிசர்வ் வங்கியால், கடந்த 2020 -- 21ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட நான்காவது கட்ட தங்க பத்திரக் கணக்கை முதிர்வுக்கு முன்னதாகவே முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு, யூனிட் ஒன்றுக்கு 9,688 ரூபாய் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது வெளியிடப்பட்ட அன்று இருந்த விலையோடு ஒப்பிடுகையில், 100 சதவீதம் அதிகமாகும்.
தங்கம் இறக்குமதியை குறைக்கும் வகையில், மத்திய அரசு தங்க பத்திர சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ல் துவங்கியது. 8 ஆண்டுகளில் தங்க பத்திரம் முதிர்வடையும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு பின்னர் முன்கூட்டியே திரும்ப பெறலாம்.
அந்த வகையில், வரும் 14ம் தேதியுடன் முன்கூட்டியே முதிர்வடையும் நான்காவது கட்ட தங்க பத்திரங்களுக்கு, கடந்த மூன்று நாட்கள் தங்கத்தின் சராசரி விலையை கொண்டு, யூனிட் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.