sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

தங்க பத்திர முதலீடு 159 சதவீதம் லாபம்

/

தங்க பத்திர முதலீடு 159 சதவீதம் லாபம்

தங்க பத்திர முதலீடு 159 சதவீதம் லாபம்

தங்க பத்திர முதலீடு 159 சதவீதம் லாபம்


ADDED : நவ 18, 2024 01:09 AM

Google News

ADDED : நவ 18, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:ரிசர்வ் வங்கியால், கடந்த 2016 -- 17ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட மூன்றாம் கட்ட தங்கப் பத்திரம், நேற்று முன்தினத்துடன் முதிர்வடைந்த நிலையில், யூனிட் ஒன்றுக்கு 7,788 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது வெளியிடப்பட்ட அன்று இருந்த விலையை விட, 159 சதவீதம் அதிகமாகும்.

மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது.

இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். தங்கப் பத்திரங்கள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து எட்டு ஆண்டுகளில், முதலீடு முழுதுமாக முதிர்வடையும்.

ஐந்தாவது ஆண்டுகளுக்குப் பிறகே, முதலீட்டை முன்கூட்டியே திரும்பப் பெறவும் அனுமதிக்கப்படும். முதிர்வுக்கு பிறகு, முதலீட்டுத் தொகை, முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி வெளியிடப்பட்ட பத்திரங்கள், கடந்த சனிக்கிழமையுடன் முதிர்வடைவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வெளியிடப்பட்ட போது ஒரு கிராம் தங்கம் 3,007 ரூபாயாக இருந்தது. இந்நிலையில், தற்போது ஒரு கிராம் தங்கத்துக்கு 7,788 ரூபாய் வழங்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், கிராம் ஒன்றுக்கு 4,781 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இது கிட்டத்தட்ட 159 சதவீதம் அதிகமாகும்.

கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் 8ம் தேதி வரையிலான காலத்தில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலையை கொண்டு, இந்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us